தருமபுரி மாவட்டம் சேக்காண்டஹள்ளி அருந்த தியர் குடியிருப்பை சுற்றி அமைக்கப்பட்டுள்ள தீண் டாமை சுவரை அகற்ற வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு வலி யுறுத்தியுள்ளது.தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் கம்பைநல் லுர் பேரூராட்சிக்குட்பட் டது சேக்கான்டஹள்ளி கிராமம். இங்கு அருந்ததிய சமூகத்தை சேர்ந்த 30 குடும் பங்கள் தலை முறை தலை முறையாக வாழ்ந்து வருகின் றன.கடந்த 1986 ம் ஆண்டு வீட்டுமனைக்காக 1 ஏக்கர் 5 சென்ட் நிலத்தை நத்தமாக வகை மாற்றம் செய்து அருந்ததிய மக்களுக்கு கொடுக்கப்பட்டது. இதில், 15 சென்ட் நிலத்திற்கு மட் டும் பட்டாகொடுத்து வீடு கள் கட்டப்பட்டது. மீத முள்ள 90 சென்ட் நிலத்திற்கு பட்டா கொடுக்காமல் காலி மனையாகவே இருந்துவந்தது. ஏற்கெனவே, போதிய இட வசதியில்லாமல் அருந்திய மக்கள் ஒரே வீட்டில் மூன்று மூன்று குடும்பங்களாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்தநிலத்திற்கு அருகா மையில் வசித்து வந்த சாதி ஆதிக்க சக்திகள் ஆக்கிரமித்த தோடு அருந்ததிய குடும்பங் கள் வசித்து வரும் பகுதி மறைத்து 7 அடி உயரத்தில் 90 அடிநீளத்திற்கு கருங்கல் லால் சுவர் எழுப்பியுள்ள னர்.தீண்டாமையின் ஒரு பகுதியாக அமைக்கப்பட் டுள்ள இதனை அகற்றக் கோரிய போது சாதி ஆதிக்க சக்திகள் அருந்ததிய மக் களை மிரட்டியுள்ளனர்.மேலும், பொது கிணறை ஆக்கிரமித்து குடிநீர் எடுக் கவும் அனுமதி மறுத்து வரு கிறார்கள். அந்த மக்கள் வழி பட்டு வந்த கோயில் நிலத் தையும் ஆக்கிரமிப்பு செய்துள் ளார்கள். சாதிய ஆதிக்க சக்திகள்தான் இப்படி என் றால், கம்பைநல்லுர் பேரூ ராட்சி நிர்வாகமும் இம்மக் களுக்கு சிமெண்ட் சாலை, சாக்கடை கால்வாய், குடிநீர், சுடுகாட்டு பாதை என எந்த வசதியும் செய்துதர மறுத்து வருகிறது.இந்நிலையில், கடந்த 5 மாதத்திற்கு முன் தீண் டாமை ஒழிப்பு முன்ன ணியினர், இந்த கிராமத் திற்கு சென்று நேரடி ஆய்வை மேற்கொண்டனர். பிறகு, இந்த பிரச்சனைகள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதனை யடுத்து, அதன் அடிப்படை யில் ஜூன் மாதம் 5 ம் தேதி அரூர் கோட்டாட்சியர் தலை மையில் அமைதிக் குழு கூட் டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில், தீண் டாமை சுவரை இடிக்கப்ப டும் என்றும் அருந்ததிய மக் களுக்கு வீட்டு மனைப் பட் டா வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்த னர். ஆனால் நான்கு மாத மாகியும் எந்த கோரிக்கையும் நிறைவேற்றவில்லை. எனவே, கோட்டாட் சியர் தலைமையில் எடுக்கப் பட்ட முடிவுகள்படி தீண் டாமை சுவரை அகற்ற வேண்டும். வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தீண் டாமை ஒழிப்பு முன்னணி யின் சார்பில் வெள்ளி யன்று(அக்.5) ஆர்ப்பாட் டம் நடத்தப்பட்டது.இதற்கிடையில், அரூர் வட்டாட்சியர் குணசேக ரன், வருவாய் அலுவலர் உமாராணி, கிராமநிர்வாக அலுவலர் சுதாகர் ஆகி யோர் சட்டமன்ற உறுப் பினர் பி.டில்லிபாபு மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, விரைந்து நடவ டிக்கை எடுப்பதாக உறுதி யளித்தனர்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சி. இராமன் தலைமை வகித் தார். மாநில பொதுச் செய லாளர் கே. சாமுவேல்ராஜ், மாவட்டச் செயலாளர் கே.குப்புசாமி, பொருளா ளர் டி. மாதையன் ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினர்.சட்டமன்ற உறுப்பினர் பி. டில்லிபாபு, சிபிஎம் வட் டச் செயலாளர் எஸ்.கே. கோவிந்தன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி. எஸ். கவிதா, மாவட்டக் குழு உறுப்பினர் எஸ். தன லட்சுமி, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி. குமார், விவசாய தொழிலா ளர் சங்க மாவட்டச் செய லாளர் இ.கே. முருகன், கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் ஆர். நடராஜன், மனித உரிமை கட்சி மாநி லத் தலைவர் பி. துரைராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக