செவ்வாய், 9 அக்டோபர், 2012

தலித் மக்களின் நிலம் ஆக்கிரமிப்பு

விழுப்புரம் மாவட்டம் வெங்கந்தூர் கிராமத்தில் தேவராஜ் என்பவரின் 3 ஏக்கர் 63 சென்ட் நிலத்தை 1997 ஆம் ஆண்டு ஆதிதிரா விட நலத்துறை நில எடுப்பு செய்து வீட்டு மனைகளாக பிரித்து 99 தலித் குடும்பங் களுக்கு வழங்கியது.ஆனால், ஆதிக்க சாதியை சேர்ந்த அந்த நில உரிமை யாளர் தேவராஜ், தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்து வருவ தால் தலித் மக்கள் வீடு கட்ட முடியாமல் தவித்து வருகின் றனர். இந்த பிரச்சனை குறித்து தகவல் அறிந்த ஆர். ராம மூர்த்தி எம்எல்ஏ, தீண் டாமை ஒழிப்பு முன்னணி ஒருங்கிணைப்பாளர் எஸ். முத்துக் குமரன் சிபிஎம் தலைவர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். 

பிறகு, பாதிக்கப்பட்ட தலித் மக் களை சந்தித்து ஆறுதல் கூறியதோடு, வீட்டுமனை பட்டா கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.இதனடிப்படையில், சிபிஎம் திண்டிவனம் வட்ட செயலாளர் எம்.கலைச் செல்வன் தலைமையில் அப் பகுதியை சேர்ந்த தலித்த மக் களுடன் மாவட்ட ஆட் சியரை நேரில் சென்று சந் தித்து புகார் மனு அளித் தனர். அந்த மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்ப தாக உறுதி கொடுத்தார்.இதனையடுத்து, 2 நாட் களில் 99 குடும்பங்க ளுக்கும் உடனடியாக மனைப் பிரிவு களை அளந்து கல் நட்டு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று வங்கந் தூர் கிராம நிர்வாக அலுவ லர், வருவாய் ஆய்வாளர் ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். 

ஆட்சியரின் உத்தரவை அமல்படுத்துவதாக அலுவ லகர்கள் தெரிவித்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக