திருச்செங்கோடு விவே கானந்தா கல்லூரி மாணவி காயத்ரி மரணம் குறித்து சிபி சிஐடி விசாரணைக்கு உத்தர விட வேண்டும் என வலி யுறுத்தி திருச்செங்கோடு அண்ணா சிலை அருகில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட் டத்திற்கு மாவட்ட தலைவர் எம்.அசோகன் தலைமை வகித்தார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய செயலாளர் உ. வாசுகி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவர் பி.சம்பத், சிபிஎம் மாவட்ட செயலாளர் எ.ரங்கசாமி, இந்திய மாணவர் சங்க மாநில தலைவர் கே.எஸ்.கனகராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாநில செயலாளர் கே. கணேஷ், ஆதித்தமிழர் பேர வை நிதி செயலாளர் நீல வேந்தன், ஆதித்தமிழர் மக்கள் கட்சியின் மாநில தலைவர் சுப.இளங்கோ ஆகியோர் கண் டன உரையாற்றினர். விவேகானந்தா கல்லூரி யில் தொடர்ச்சியாக நடை பெறும் மரணங்கள் குறித்து முழு விசாரணை செய்ய வேண்டும். மாணவி காயத்ரி மர ணம் குறித்து விசாரணை கோரி நியாயமான முறையில் அமைதியாக போராடிய மக்கள் மீது காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைக் கண்டித்தும், தாக்குதல் நடத்திய காவல் துறை அதிகாரிகள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும்; அமைதியாகப் போராடிய மக் கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என ஆர்ப்பாட்டத் தில் வலியுறுத்தப்பட்டது.
ஆண்டிபாளையம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் எ.ஆதிநாராயணன், விவசாயி கள் சங்க மாவட்ட செயலாளர் பி.பெருமாள், இந்திய தொழிற் சங்க மைய மாவட்ட செய லாளர் ந.வேலுசாமி, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.சுரேஷ், விவசாயத் தொழி லாளர் சங்க மாவட்ட துணை தலைவர் பி.செங்கோடன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் பி.ஜெயமணி, மாணவர் சங்க மாவட்ட தலைவர் எ.டி.கண் ணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட பொரு ளாளர் பி.ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக