வியாழன், 25 அக்டோபர், 2012

சாதி மறுப்பு திருமண ஜோடிக்குப் பாராட்டு!!


வலங்கைமான் ஒன்றியம் ஆலங்குடியில் அக்.24 அன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருவாரூர் மாவட்ட மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் சாதி மறுப்புத்திருமணம் செய்து கொண்ட பாலமுருகன், ஆனந்தி ஆகியோருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.லாசர் சால்வை அணிவித்து கவுரவித்தார். 

பாலமுருகன் ஆலங்குடி கடைவீதியில் கடை வைத்திருக்கிறார். அந்தக் கடையில் பணியாற்றி வந்த ஆனந்தி என்ற பெண்ணும் இவரும் ஒருவரையொருவர் காதலித்துள்ளனர். ஆனந்தி தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர்களது காதல் குறித்து அறிந்த சாதி ஆதிக்க வெறியர்கள் பாலமுருகனை மிரட்டியுள்ளனர். இதை பொருட்படுத்தாமல் பாலமுருகன், ஆனந்தியை திருமணம் செய்திருக்கிறார்.

சாதி ஆதிக்க வெறியர்களின் மிரட்டல் காரணமாக இருவரும் தலைமறைவாயினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இவர்களைத் தொடர்பு கொண்டு, காவல்துறையில் புகார் கொடுக்க ஏற்பாடு செய்தனர். இந்நிலையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாட்டில் இவர்களைப் பாராட்டி கவுரவித்த ஏ.லாசர், சாதி மறுப்புத் திருமணங்கள் மூலம் தீண்டாமையை ஒழிக்க முடியும் என்றும், இந்தத் தம்பதியினருக்கு உரிய பாதுகாப்பு வழங்க காவல்துறையினர் முன்வர வேண்டும் என்றும் குறிப்பிட்டார். 

ஞாயிறு, 21 அக்டோபர், 2012

தலித் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள்!!

உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்
ஹரியானா முதல்வரிடம் மாதர் அமைப்புகள் வலியுறுத்தல்
 
புதுதில்லி, அக். 20-ஹரியானா மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் பெண்களுக்கு எதிராக, அதிலும் தலித் பெண்களுக்கு எதிராக பல்வேறுவித மான பாலியல் கொடுமைகள் நடைபெற்று வருகின்றன. இவற்றை செய்திடும் கயவர்கள் மீது உரிய கிரிமினல் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உட்பட பல்வேறு மாதர் அமைப் புகள் ஹரியானா முதல்வரிடம் கோரியுள்ளன.ஹரியானா மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் கொடுமைகள் குறித்தும், அதற்கு எதிராக 15ஆம் தேதி நடை பெற்ற பேரணி மற்றும் 17ஆம் தேதி ஹரியானா முதல்வருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை கள் குறித்தும் அனைத்து மாதர் அமைப்புக ளின் சார்பில் வியாழனன்று மாலை புதுதில்லி யில் உள்ள பெண் பத்திரிகையாளர் அணி அலு வலகத்தில் செய்தியாளர்கள் கூட்டம் நடை பெற்றது. அக்கூட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலாளர் சுதா சுந்தரராமனும் பல்வேறு மாதர் அமைப்புகளின் தலைவர்களும் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

“ஹரியானா மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலும் தலித் பெண்களுக்கு எதிராக மிகவும் கொடூரமானமுறையில் பாலியல் குற்றங்களில் கயவர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி ஹரியானா மாநிலம், ரோஹ்தாக் நகரில் அக்டோபர் 15 அன்று அனைத்து மாதர் அமைப்புகளின் சார்பிலும் பேரணி-ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஹரியானா மாநில அரசு, இவ்வாறு பேரணியாக வரும் பெண்களின் ஜனநாயகக் குரலுக்குச் செவி மடுக்க மறுத்ததோடு மட்டுமல்லாமல், இவர்கள் மீது காவல்துறையினரைக் கொண்டு காட்டுமிராண்டித்தனமாக குண்டாந்தடி, கண்ணீர்ப்புகை குண்டுகள் வீச்சு என அடக்கு முறையை ஏவிவிட்டது. மனு கொடுக்கச் சென்ற மாதர் அமைப்பின் தலைவர்களை, மாவட்ட ஆட்சியரும் பார்க்க மறுத்துள்ளார். அதனை அடுத்து பெண்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பின்னரே 17ஆம் தேதியன்று மாதர் அமைப்புகளின் தலைவர்களை ஹரியானா முதல்வர் சந்திப்பதற்கு ஒப்புக் கொண்டுள்ளார்.

பின்னர் பெண்கள் தர்ணாவை முடித்துக் கொண்டு கலைந்து சென்றனர்.17ஆம் தேதியன்று சண்டிகரில் முதல்வர் அலுவலகத்தில் முதல்வர் பூபிந்தர்சிங் ஹூடாவையும் சமூகநலத்துறை அமைச்சர் கீதா புக்கலையும் மாதர் அமைப்புகளின் தலைவர்கள் சந்தித்தார்கள்.அவர்களிடம் ‘பெண்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்த அனைவர் மீதும் வழக்கு தொடரப்பட்டு தண்டிக்காமல் விடப்பட மாட்டார்கள்’ என்ற உறுதிமொழியை முதல்வர் ஹூடா அளித்தார். பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்டு பாதிக்கப்பட்டு காவல்நிலையத்திற்கு வரும் பெண்கள் தரும் புகார்களை காவல்துறையினர் வாங்க மறுக்கும் நிகழ்வுகளை மாதர் அமைப் பினர் சுட்டிக்காட்டியபோது, இதுதொடர்பாக அனைத்துக் காவல்நிலையங்களுக்கும் வழி காட்டும் நெறிமுறைகள் உடனடியாக அனுப்பி வைக்கப்படும் என்ற உறுதிமொழியைத் தந்துள்ளார்.

பெண்களுக்கு எதிரான கொடுமைகள் புரிந் தோருக்கு எதிரான வழக்குகளை விரைவில் விசாரணை செய்து தீர்ப்பு வழங்கிடும் வகை யில் விரைவு விசாரணை நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என்று மாதர் அமைப் பினர் கோரியபோது, பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்றத்தின் அனுமதி பெற்று அவ்வாறு நீதிமன்றங்கள் திறந்திட நடவடிக்கை எடுப்ப தாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். கட்டப் பஞ்சாயத்துக்கள் தொடர்பாக மாதர் அமைப்பினர் முறையிட்டபோது, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எதுவும் எடுக்க முதல்வர் முன்வராததோடு மட்டுமல்லாமல், தட்டிக் கழிக்க முயற்சித்தார்.முன் அனுமதி பெற்று பேரணியாக வந்த பெண்கள் மீது காவல்துறையினர் காட்டு மிராண்டித்தனமாக குண்டாந்தடியால் எவ் வாறு தாக்கலாம் என்று மாதர் அமைப்பினர் முதல்வரிடம் கேட்டபோது, முதல்வர் சரியான பதில் சொல்ல மறுத்துவிட்டார்.

மேலும் அன் றைய தினம் பெண்கள் பலருக்கு எதிராக காவல்துறையினர் பல்வேறு குற்றப்பிரிவு களின்கீழ் வழக்குகள் பதிவு செய்திருப்பதைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று மாதர் அமைப்பினர் வலியுறுத்தியபோது, அதற்கும் சரியானமுறையில் முதல்வர் பதில ளிக்காமல் மழுப்பிவிட்டார்.இந்நிலையில் பெண்களுக்கு எதிராக ஹரி யானா மாநிலத்தில் மட்டுமல்ல, மேற்கு வங்கம், கர்நாடகம் உட்பட பல மாநிலங்களில் குற்றங் கள் அதிகரித்து வருகிறது. இவற்றிற்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்த இருக்கிறோம். இவ்வாறு மாதர் அமைப்பின் தலைவர் கள் கூறினார்கள்.

வியாழன், 18 அக்டோபர், 2012

காந்தி காலனியில் தீண்டாமைச்சுவர்!!

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் ஒன்றியம், தென்னாமல்லூர் ஊராட்சிக்குட்பட்டது தென்னமல்லூர் கிராமம். இங்குள்ள காந்தி காலனியில் 130 தலித் அருந்ததியர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பிரதான சாலைக்கும், பேருந்து நிறுத்தத்திற்கும் செல்ல "முதல் நடுவழி (SF No. 56/34)" என்ற வழியை அவர்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வந்தனர். கடந்த சில ஆண்டுகளாகவே இந்த வழியை தங்களின் சொந்த இடம் என்று சொல்லிக் கொண்டு தனியார் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்திருந்தார். அருந்ததிய மக்கள் அந்த வழியைப் பயன்படுத்தி விடக்கூடாது என்பதே அதற்கான காரணமாக இருந்தது. ஆனால், அது பொது வழித்தடம் என்று தெரிய வந்தபிறகு, ஆக்கிரமிப்பு செய்து போடப்பட்டிருக்கும் வேலி அகற்றப்பட வேண்டும் என்று காந்தி காலனி மக்கள் கோரிக்கை வைத்தனர். 

அக்டோபர் 2 அன்று நடந்த கிராமசபைக் கூட்டத்திலும் அவர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினார்கள். ஆனால், ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர் வேலியை அகற்றாததோடு, தற்போது சுவர் ஒன்றையும் எழுப்பியுள்ளார். தலித் அருந்ததியர் மக்களை சாதி ரீதியாக கீழானவர்கள் என்ற பார்வையோடு சட்டவிரோதமாக எழுப்பப்பட்டிருக்கும் இந்த தீண்டாமைச்சுவர் உடனடியாக அகற்றப்படுவதே பொருத்தமானதாகும். மேலும், ஆக்கிரமிப்பு வேலியும் அகற்றப்பட்டு, அருந்ததிய மக்களின் பயன்பாட்டுக்கு அந்தப் பாதை உடனடியாகத் திறந்துவிடப்பட வேண்டும். எந்த ஊரில் தீண்டாமை என்றாலும் உடனடியாகத் தலையிடும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பபு முன்னணி சார்பில் நான் மற்றும் அப்பகுதி மக்கள் சுவரைப்பார்த்து ஆய்வு செய்தோம். முன்னணியின் மாவட்டச் செயலாளர் யு.கே.சிவஞானம், மாவட்ட பொருளாளர் கஜேந்திரன், மாவட்ட நிர்வாகி ஷீலாராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டாமுத்தூர் ஒன்றிய செயலாளர் ஆறுச்சாமி ஆகியோர் மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்துள்ளனர். 

வெள்ளி, 12 அக்டோபர், 2012

அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையில் பிள்ளையார்!


தருமபுரி நகரில் காந்தி நகருக்கும் அம்பேத்கார் நகரருக்கும் இடையே உள்ள தீண்டாமை சுவற்றை அகற்றவேண்டுமென தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள் ளது.தருமபுரி நகராட்சிக் குட்பட்ட காந்திநகரும் அம் பேத்கார் நகரும் அருகாமை யில் உள்ளது. காந்திநகரில் அம்பேத்கார் நகரைச் சேர்ந்த மாது என்பவரது மனைவி எம். காஞ்சனா நக ராட்சியின் அனுமதிபெற்று வீடு கட்டி வருகிறார். இந்த மனைக்கு செல்ல பிரதான வழி காந்திநகர் இரண்டா வது குறுக்கில் உள்ள நக ராட்சி பொதுச் சாலையாகும்.

காஞ்சனா வீடுகட்டி வரும் நிலையில் தலித் சமூ தாயத்தவர் இந்த சாலையை பயன்படுத்தக் கூடாது என்ற நோக்கத்தில் நகராட்சியின் சாலையை வழிமறித்து சுமார் 7 அடி உயரம் 15 அடி நீளம் கொண்ட தீண்டாமை சுவர் எழப்பியுள்ள னர். தீண் டாமைசுவரை மறைப்பதற் காக சுவரையெட்டி வினா யகர் சிலைவைத்து கோயில் கட்டிவருகின்றனர்.இச்சூழ்நிலையில் தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் கே. குப்புசாமி, மாவட்ட நிர்வாகிகள் ஏ. குமார், டி. எஸ். கவிதா, நாகைபாலு, டி. சுப்பிர மணியன், கனகசபை ஆகி யோர் இந்த சுவரை நேரில் பார்வையிட்டனர். நக ராட்சி சாலையில் இந்த சுவரை கட்டியிருப்பது சட்ட விரோதமானது என்ற அவர்கள், உடனே நகராட்சி நிர்வாகம் தலை யிட்டு தீண்டாமை சுவரை அகற்றி தலித்மக்களின் உரிமையை நிலை நாட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண் டுள்ளனர். நகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு புகார் மனு கொடுத்துள்ளனர்.

புதன், 10 அக்டோபர், 2012

இருளர் மக்களின் பாதை ஆக்கிரமிப்பு


தருமபுரி அருகே உள்ள தடங்கம் கொத்தடிமை காலனி இருளர் இன மக்கள் பயன்படுத்தி வந்த சாலையை மறித்து கட்டப் பட்டுள்ள தீண்டாமைச் சுவரை அகற் றக் கோரி தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் தருமபுரியில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.தருமபுரி வட்டம் தடங் கம் ஊராட்சிக்குட்பட்ட கொத்தடிமை காலனியில் இருளர் இனத்தை சேர்ந்த 40 குடும்பங்கள் வசித்து வரு கின்றன. ஆந்திர மாநிலத்தில் கொத்தடிமைகளாக இருந்த அந்த மக்களை மீட்டு தடங் கம் அருகே குடி அமர்த்தப் பட்டது. பிறகு, 1997 ம் ஆண்டு சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியரால் பட்டா வழங்கப்பட்டு தொகுப்பு வீடும் கட்டி கொடுக்கப்பட்டது.மேலும், சேலம்- ஓசூர் புற வழிச் சாலையில் அமலா பள்ளி அருகிலிருந்து கொத் தடிமை காலனி, அரசுக்கு சொந்தமான வனப்பகுதி வரைக்கும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு 22 அடி அகல சாலை வசதியும் செய்து தரப்பட்டது. சாலைக்காக நிலம் ஒதுக்கப்பட்டது அரசு ஆவணத்திலும் உள்ளது.ஆனால், இருளர் கால னிக்கு அருகில் உள்ள நில உரிமையாளர் அந்த சாலை யை ஆக்கிரமித்துக் கொண் டுள்ளார். நடைபாதை அள வுக்கு மட்டுமே இடத்தை விட்டு நீண்ட உயரத்திற்கு கருங்கல்லில் சுவரை எழுப் பியுள்ளார். இதனால், சாலை யின் அளவு குறைந்துவிட்ட தால் 108 ஆம்புலன்ஸ் வாக னம்கூட கிராமத்திற்குள் நுழைய முடிவில்லை. இரு சக்கர வாகனத்தை தவிர வேறு எந்த வாகனமும் செல்ல முடிவதில்லை. ஆகவே, இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இருளர் இன மக் களை மிரட்டியுள்ளார். இந்த பிரச்சனை குறித்து அதிகாரிகளுக்கு புகார் தெரி வித்தும் எந்த நடவடிக்கை யும் இல்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்கள் கிராமத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப் போது அந்த சுவர் தீண் டாமையின் ஒரு வடிவமாக உள்ளதை காண முடிந்தது.ஆகவே, இந்த சுவரை இடிக்க வேண்டும், சுடுகாடு வசதிகூட இல்லாமல் அவ திப்படுவதால் உடனடியாக சுடுகாடு அமைத்துக் கொடுக்க வேண்டும், சிமெண்ட் சாலை, தெரு விளக்கு, குடிநீர் வசதி கள் செய்துதர வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர்.தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் கே. குப்புசாமி தலைமை வகித்தார்.

மாநில பொதுச் செயலாளர் கே. சாமுவேல்ராஜ், சட்டமன்ற உறுப்பினர் பி. டில்லிபாபு, மாவட்டத் தலைவர் சி. இராமன், பொருளாளர் டி. மாதையன் ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினர்.மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் ஏ. குமார், எம். முத்து, தருமபுரி ஒன்றியச் செயலாளர் டி.எஸ். ராமச் சந்திரன், நல்லம்பள்ளி ஒன் றியச் செயலாளர் எம். ராஜேந்திரன், மாதேஸ், கே. என். மல்லையன், கே. ஆர். சக்கரவர்த்தி ஆகியோர் வாழ்த்திப்பேசினர்.

செவ்வாய், 9 அக்டோபர், 2012

கல்லூரி மாணவி காயத்ரி மரணம்..!! சிபி சிஐடி விசாரணைக்கு உத்தரவிடு


திருச்செங்கோடு விவே கானந்தா கல்லூரி மாணவி காயத்ரி மரணம் குறித்து சிபி சிஐடி விசாரணைக்கு உத்தர விட வேண்டும் என வலி யுறுத்தி திருச்செங்கோடு அண்ணா சிலை அருகில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட் டத்திற்கு மாவட்ட தலைவர் எம்.அசோகன் தலைமை வகித்தார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய செயலாளர் உ. வாசுகி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவர் பி.சம்பத், சிபிஎம் மாவட்ட செயலாளர் எ.ரங்கசாமி, இந்திய மாணவர் சங்க மாநில தலைவர் கே.எஸ்.கனகராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாநில செயலாளர் கே. கணேஷ், ஆதித்தமிழர் பேர வை நிதி செயலாளர் நீல வேந்தன், ஆதித்தமிழர் மக்கள் கட்சியின் மாநில தலைவர் சுப.இளங்கோ ஆகியோர் கண் டன உரையாற்றினர். விவேகானந்தா கல்லூரி யில் தொடர்ச்சியாக நடை பெறும் மரணங்கள் குறித்து முழு விசாரணை செய்ய வேண்டும். மாணவி காயத்ரி மர ணம் குறித்து விசாரணை கோரி நியாயமான முறையில் அமைதியாக போராடிய மக்கள் மீது காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைக் கண்டித்தும், தாக்குதல் நடத்திய காவல் துறை அதிகாரிகள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும்; அமைதியாகப் போராடிய மக் கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என ஆர்ப்பாட்டத் தில் வலியுறுத்தப்பட்டது.

ஆண்டிபாளையம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் எ.ஆதிநாராயணன், விவசாயி கள் சங்க மாவட்ட செயலாளர் பி.பெருமாள், இந்திய தொழிற் சங்க மைய மாவட்ட செய லாளர் ந.வேலுசாமி, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.சுரேஷ், விவசாயத் தொழி லாளர் சங்க மாவட்ட துணை தலைவர் பி.செங்கோடன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் பி.ஜெயமணி, மாணவர் சங்க மாவட்ட தலைவர் எ.டி.கண் ணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட பொரு ளாளர் பி.ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தலித் மக்களின் நிலம் ஆக்கிரமிப்பு

விழுப்புரம் மாவட்டம் வெங்கந்தூர் கிராமத்தில் தேவராஜ் என்பவரின் 3 ஏக்கர் 63 சென்ட் நிலத்தை 1997 ஆம் ஆண்டு ஆதிதிரா விட நலத்துறை நில எடுப்பு செய்து வீட்டு மனைகளாக பிரித்து 99 தலித் குடும்பங் களுக்கு வழங்கியது.ஆனால், ஆதிக்க சாதியை சேர்ந்த அந்த நில உரிமை யாளர் தேவராஜ், தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்து வருவ தால் தலித் மக்கள் வீடு கட்ட முடியாமல் தவித்து வருகின் றனர். இந்த பிரச்சனை குறித்து தகவல் அறிந்த ஆர். ராம மூர்த்தி எம்எல்ஏ, தீண் டாமை ஒழிப்பு முன்னணி ஒருங்கிணைப்பாளர் எஸ். முத்துக் குமரன் சிபிஎம் தலைவர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். 

பிறகு, பாதிக்கப்பட்ட தலித் மக் களை சந்தித்து ஆறுதல் கூறியதோடு, வீட்டுமனை பட்டா கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.இதனடிப்படையில், சிபிஎம் திண்டிவனம் வட்ட செயலாளர் எம்.கலைச் செல்வன் தலைமையில் அப் பகுதியை சேர்ந்த தலித்த மக் களுடன் மாவட்ட ஆட் சியரை நேரில் சென்று சந் தித்து புகார் மனு அளித் தனர். அந்த மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்ப தாக உறுதி கொடுத்தார்.இதனையடுத்து, 2 நாட் களில் 99 குடும்பங்க ளுக்கும் உடனடியாக மனைப் பிரிவு களை அளந்து கல் நட்டு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று வங்கந் தூர் கிராம நிர்வாக அலுவ லர், வருவாய் ஆய்வாளர் ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். 

ஆட்சியரின் உத்தரவை அமல்படுத்துவதாக அலுவ லகர்கள் தெரிவித்தனர்.