திங்கள், 8 அக்டோபர், 2012

கிறிஸ்தவ ஆலய சிறப்புப் பிரார்த்தனை : 6 தலித் மதகுருக்கள் புறக்கணிப்பு




இராமேஸ்வரத்தில் இருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள திருவாடானையில் வெள்ளி விழா கொண்டாடும் கிறிஸ்தவ ஆலய சிறப்பு பிரார்த்தனையில் 6 தலித் மத குருக்கள் சேர்க்கப்படவில் லை. இதை கண்டித்து சிலர் வன்மு றையில் ஈடு பட்டதால், அங்கு பதற்றம் ஏற் பட்டது எனக் காவல் துறையினர் கூறினர்.

ஓரியூர் புனித அருளானந் தர் கிறிஸ்தவ ஆலயம் வெள்ளி விழா ஆண்டை எட்டியுள்ளது. இதன் மதகுரு சூசை மாணிக் கம் கூறுகையில், ஆலய வெள்ளி விழாவையொட்டி 200 பாதிரி யார்கள் மற்றும் கன்னி யாஸ்திரிகள் ஆலயத்தை நோக்கி ஊர்வ லமாக வந்தனர். அவர்களை தலித் கிறிஸ்தவர் கள் தடுத்து நிறுத்தி, 6 தலித் மதகுருக் களை நீக்கம் செய்த தற்கான காரணம் என்ன என்று கேள்வி எழுப்பினர். திருப்பலி பூஜையிலும், சிறப்பு பிரார்த்தனையிலும் தலித் கிறிஸ்தவ குருக்கள் சேர்க்கப் படும் வரை, விழாவை நடத்த அனுமதிக்கமாட்டோம் என அவர்கள் கூறினர் என்றார்.காவல்துறையினர் கூறு கையில், சிலர் தெரு விளக்கு களை அடித்து உடைத்தனர். அலங்காரத் தோரணங்களை அறுத்து எறிந்தனர் என்றனர்.

இந்த சூழ்நிலையில் திரு வாடானையில் பதற்றம் நீடிப்ப தால் தலித்துகளுடன் பேச்சு வார்த்தை நடத்த விழாக் கொண் டாட்டத்தை நிறுத்த ஆலய நிர்வாகிகள் முடிவு செய்துள் ளனர்.இதற்கிடையே தலித் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக, இராமேஸ்வரத்தை ஒட்டிய பகுதிகளில் கறுப்புக் கொடி ஏற்றி, திருவாடானை ஆலயத் தினரின் புறக்கணிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக