புதன், 10 அக்டோபர், 2012

இருளர் மக்களின் பாதை ஆக்கிரமிப்பு


தருமபுரி அருகே உள்ள தடங்கம் கொத்தடிமை காலனி இருளர் இன மக்கள் பயன்படுத்தி வந்த சாலையை மறித்து கட்டப் பட்டுள்ள தீண்டாமைச் சுவரை அகற் றக் கோரி தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் தருமபுரியில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.தருமபுரி வட்டம் தடங் கம் ஊராட்சிக்குட்பட்ட கொத்தடிமை காலனியில் இருளர் இனத்தை சேர்ந்த 40 குடும்பங்கள் வசித்து வரு கின்றன. ஆந்திர மாநிலத்தில் கொத்தடிமைகளாக இருந்த அந்த மக்களை மீட்டு தடங் கம் அருகே குடி அமர்த்தப் பட்டது. பிறகு, 1997 ம் ஆண்டு சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியரால் பட்டா வழங்கப்பட்டு தொகுப்பு வீடும் கட்டி கொடுக்கப்பட்டது.மேலும், சேலம்- ஓசூர் புற வழிச் சாலையில் அமலா பள்ளி அருகிலிருந்து கொத் தடிமை காலனி, அரசுக்கு சொந்தமான வனப்பகுதி வரைக்கும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு 22 அடி அகல சாலை வசதியும் செய்து தரப்பட்டது. சாலைக்காக நிலம் ஒதுக்கப்பட்டது அரசு ஆவணத்திலும் உள்ளது.ஆனால், இருளர் கால னிக்கு அருகில் உள்ள நில உரிமையாளர் அந்த சாலை யை ஆக்கிரமித்துக் கொண் டுள்ளார். நடைபாதை அள வுக்கு மட்டுமே இடத்தை விட்டு நீண்ட உயரத்திற்கு கருங்கல்லில் சுவரை எழுப் பியுள்ளார். இதனால், சாலை யின் அளவு குறைந்துவிட்ட தால் 108 ஆம்புலன்ஸ் வாக னம்கூட கிராமத்திற்குள் நுழைய முடிவில்லை. இரு சக்கர வாகனத்தை தவிர வேறு எந்த வாகனமும் செல்ல முடிவதில்லை. ஆகவே, இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இருளர் இன மக் களை மிரட்டியுள்ளார். இந்த பிரச்சனை குறித்து அதிகாரிகளுக்கு புகார் தெரி வித்தும் எந்த நடவடிக்கை யும் இல்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்கள் கிராமத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப் போது அந்த சுவர் தீண் டாமையின் ஒரு வடிவமாக உள்ளதை காண முடிந்தது.ஆகவே, இந்த சுவரை இடிக்க வேண்டும், சுடுகாடு வசதிகூட இல்லாமல் அவ திப்படுவதால் உடனடியாக சுடுகாடு அமைத்துக் கொடுக்க வேண்டும், சிமெண்ட் சாலை, தெரு விளக்கு, குடிநீர் வசதி கள் செய்துதர வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர்.தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் கே. குப்புசாமி தலைமை வகித்தார்.

மாநில பொதுச் செயலாளர் கே. சாமுவேல்ராஜ், சட்டமன்ற உறுப்பினர் பி. டில்லிபாபு, மாவட்டத் தலைவர் சி. இராமன், பொருளாளர் டி. மாதையன் ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினர்.மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் ஏ. குமார், எம். முத்து, தருமபுரி ஒன்றியச் செயலாளர் டி.எஸ். ராமச் சந்திரன், நல்லம்பள்ளி ஒன் றியச் செயலாளர் எம். ராஜேந்திரன், மாதேஸ், கே. என். மல்லையன், கே. ஆர். சக்கரவர்த்தி ஆகியோர் வாழ்த்திப்பேசினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக