கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் ஒன்றியம், தென்னாமல்லூர் ஊராட்சிக்குட்பட்டது தென்னமல்லூர் கிராமம். இங்குள்ள காந்தி காலனியில் 130 தலித் அருந்ததியர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பிரதான சாலைக்கும், பேருந்து நிறுத்தத்திற்கும் செல்ல "முதல் நடுவழி (SF No. 56/34)" என்ற வழியை அவர்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வந்தனர். கடந்த சில ஆண்டுகளாகவே இந்த வழியை தங்களின் சொந்த இடம் என்று சொல்லிக் கொண்டு தனியார் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்திருந்தார். அருந்ததிய மக்கள் அந்த வழியைப் பயன்படுத்தி விடக்கூடாது என்பதே அதற்கான காரணமாக இருந்தது. ஆனால், அது பொது வழித்தடம் என்று தெரிய வந்தபிறகு, ஆக்கிரமிப்பு செய்து போடப்பட்டிருக்கும் வேலி அகற்றப்பட வேண்டும் என்று காந்தி காலனி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
அக்டோபர் 2 அன்று நடந்த கிராமசபைக் கூட்டத்திலும் அவர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினார்கள். ஆனால், ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர் வேலியை அகற்றாததோடு, தற்போது சுவர் ஒன்றையும் எழுப்பியுள்ளார். தலித் அருந்ததியர் மக்களை சாதி ரீதியாக கீழானவர்கள் என்ற பார்வையோடு சட்டவிரோதமாக எழுப்பப்பட்டிருக்கும் இந்த தீண்டாமைச்சுவர் உடனடியாக அகற்றப்படுவதே பொருத்தமானதாகும். மேலும், ஆக்கிரமிப்பு வேலியும் அகற்றப்பட்டு, அருந்ததிய மக்களின் பயன்பாட்டுக்கு அந்தப் பாதை உடனடியாகத் திறந்துவிடப்பட வேண்டும். எந்த ஊரில் தீண்டாமை என்றாலும் உடனடியாகத் தலையிடும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பபு முன்னணி சார்பில் நான் மற்றும் அப்பகுதி மக்கள் சுவரைப்பார்த்து ஆய்வு செய்தோம். முன்னணியின் மாவட்டச் செயலாளர் யு.கே.சிவஞானம், மாவட்ட பொருளாளர் கஜேந்திரன், மாவட்ட நிர்வாகி ஷீலாராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டாமுத்தூர் ஒன்றிய செயலாளர் ஆறுச்சாமி ஆகியோர் மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்துள்ளனர்.
அக்டோபர் 2 அன்று நடந்த கிராமசபைக் கூட்டத்திலும் அவர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினார்கள். ஆனால், ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர் வேலியை அகற்றாததோடு, தற்போது சுவர் ஒன்றையும் எழுப்பியுள்ளார். தலித் அருந்ததியர் மக்களை சாதி ரீதியாக கீழானவர்கள் என்ற பார்வையோடு சட்டவிரோதமாக எழுப்பப்பட்டிருக்கும் இந்த தீண்டாமைச்சுவர் உடனடியாக அகற்றப்படுவதே பொருத்தமானதாகும். மேலும், ஆக்கிரமிப்பு வேலியும் அகற்றப்பட்டு, அருந்ததிய மக்களின் பயன்பாட்டுக்கு அந்தப் பாதை உடனடியாகத் திறந்துவிடப்பட வேண்டும். எந்த ஊரில் தீண்டாமை என்றாலும் உடனடியாகத் தலையிடும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பபு முன்னணி சார்பில் நான் மற்றும் அப்பகுதி மக்கள் சுவரைப்பார்த்து ஆய்வு செய்தோம். முன்னணியின் மாவட்டச் செயலாளர் யு.கே.சிவஞானம், மாவட்ட பொருளாளர் கஜேந்திரன், மாவட்ட நிர்வாகி ஷீலாராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டாமுத்தூர் ஒன்றிய செயலாளர் ஆறுச்சாமி ஆகியோர் மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக