வெள்ளி, 12 அக்டோபர், 2012

அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையில் பிள்ளையார்!


தருமபுரி நகரில் காந்தி நகருக்கும் அம்பேத்கார் நகரருக்கும் இடையே உள்ள தீண்டாமை சுவற்றை அகற்றவேண்டுமென தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள் ளது.தருமபுரி நகராட்சிக் குட்பட்ட காந்திநகரும் அம் பேத்கார் நகரும் அருகாமை யில் உள்ளது. காந்திநகரில் அம்பேத்கார் நகரைச் சேர்ந்த மாது என்பவரது மனைவி எம். காஞ்சனா நக ராட்சியின் அனுமதிபெற்று வீடு கட்டி வருகிறார். இந்த மனைக்கு செல்ல பிரதான வழி காந்திநகர் இரண்டா வது குறுக்கில் உள்ள நக ராட்சி பொதுச் சாலையாகும்.

காஞ்சனா வீடுகட்டி வரும் நிலையில் தலித் சமூ தாயத்தவர் இந்த சாலையை பயன்படுத்தக் கூடாது என்ற நோக்கத்தில் நகராட்சியின் சாலையை வழிமறித்து சுமார் 7 அடி உயரம் 15 அடி நீளம் கொண்ட தீண்டாமை சுவர் எழப்பியுள்ள னர். தீண் டாமைசுவரை மறைப்பதற் காக சுவரையெட்டி வினா யகர் சிலைவைத்து கோயில் கட்டிவருகின்றனர்.இச்சூழ்நிலையில் தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் கே. குப்புசாமி, மாவட்ட நிர்வாகிகள் ஏ. குமார், டி. எஸ். கவிதா, நாகைபாலு, டி. சுப்பிர மணியன், கனகசபை ஆகி யோர் இந்த சுவரை நேரில் பார்வையிட்டனர். நக ராட்சி சாலையில் இந்த சுவரை கட்டியிருப்பது சட்ட விரோதமானது என்ற அவர்கள், உடனே நகராட்சி நிர்வாகம் தலை யிட்டு தீண்டாமை சுவரை அகற்றி தலித்மக்களின் உரிமையை நிலை நாட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண் டுள்ளனர். நகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு புகார் மனு கொடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக