நாகை வட்டம் சிக்கல் மற் றும் புதுச்சேரிக்கு அருகே உள்ள மேல விக்னாபுரத்தில் ஆதிக்கச் சாதியினருக்காக தனியாக ஒரு சுடுகாடு ஏற் படுத்துவதை எதிர்த்து தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி சார்பில் ஞாயிற்றுக் கிழமை அன்று மேலவிக்னா புரத்தில் மாபெரும் ஆர்ப்பாட் டத்தில் இறங்கினர்.மேல விக்னாபுரத்தில் ஏற் கனவே ஒரு பொது மயானம் உள்ளது. இதனை தலித் மக் களும் அவ்வூரின் மற்ற சாதி யினரும் தொடர்ந்து பயன் படுத்தி வருகின்றனர். ஆனால், சாதி வெறியர் சிலருக்கு தங் களுக் கென்று ஒரு தனி மயா னம் வேண்டும் என்று கூறி வரு கின்றனர். இந்நிலையில், கடந்த உள்ளாட்சித் தேர்த லில் புதுச்சேரி ஊராட்சிமன் றத் தலைவர் தேர்தலில், சிபிஎம் சார்பில் போட்டியிட்ட எஸ்.என். ஜீவாராமனை எதிர்த்து அதி முக சார்பில் இளவரசன் என்பவர் போட்டி யிட்டு வென்றார். இவரும்ஒரு தலித்துதான். தேர்தலில் வெற்றி பெற, தான் ஜெயித்தால் மேல் சாதியின ருக்காக தனிமயா னம் ஒன்று ஏற்படுத்தி தருவ தாக வாக்குறுதி அளித்து, அவர்களின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுவிட்டார். தனது நன்றிக் கடனாக, ‘தாய்த் திட்ட’த்தில் தனியொரு மயானம் கட்டத் துவங்கினார்.இதனை அறிந்த தீண் டாமை ஒழிப்பு முன்னணியி னர், சாதியக் கொடுமைகளை வேரறுக்கப் போராடிய செங் கொடி இயக்கத்தின் மாபெரும் தலைவர் பி.எஸ்.ஆர். நினைவு நாளாகிய செப்டம்பர் 30 ஞாயிற் றுக்கிழமையன்று, 700க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஒருங் கிணைப்பாளர் எம்.காத்த முத்து தலைமை யில், இரண் டாவது மயானம் கட்டப்படு வதை எதிர்த்து மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.இதில் தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியினர் உட்பட 100க்கும் மேற்பட்ட பெண் களும் கலந்து கொண்டனர்.
இந்த தகவலறிந்து நாகை வட்டாட்சியர் எல்.சம்பத்குமார் மற்றும் சில அதிகாரிகள் தலத் திற்கு வந்து, போராட்டத் தலை வர் எம்.காத்தமுத்து மற்றும் இயக்கத் தலைவர்களோடு பேச்சு வார்த்தை நடத்தினர். தனி மயானம் கட்டப்பட மாட் டாது என்று உறுதியளித்த னர். இதனிடையே, நாகை வரு வாய்க் கோட்டாட்சியர் வே. மணிகண்டன், எம்.காத்த முத்துவுடன் செல்போனில் தொடர்புகொண்டு, தனி மயா னம் கட்ட அனுமதி அளிக்கப் படாது என்று உறுதியளிக் கவே, போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.அரசு அதிகாரிகளால் தரப் பட்டுள்ள இந்த வாக்குறுதி களை மீறி, ஊராட்சி மன்றத் தலைவர் இளவரசன்,மீண்டும் மயானம் கட்டும் முயற்சியில் இறங்குவாரானால், புதன் கிழமை அன்றும் அல்லது தொடர்ந்தும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி யினரின் இந்தப் போராட்டம் தீவிரமாக நடைபெறும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாவட்ட ஒருங் கிணைப்பாளர் எம்.காத்த முத்து தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக