செவ்வாய், 9 அக்டோபர், 2012

ராஜினாமா செய்வதைத் தவிர வேறு வழியில்லை!!!



மதுரை, அக்.1-மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட லெ. கொட்டாணிப்பட்டி ஊராட்சி மன்ற தலை வரான அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்த பொ.ஜனகருக்கு எதிராக தொடரும் மிரட்டல்கள், நிர்வாக ஒத்துழைப்பின் மைக்கு எதிராக பல முறை புகார் கொடுத் தும், வழக்குப்பதிவு செய்தும் எந்த நட வடிக்கையும் கடந்த ஓராண்டாக எடுக் கப்படவில்லை. மக்களுக் கானப் பணியை செய்ய முடியாத போது எதற்கு இந்தப் பதவி என்ற கேள்வியை சமூகத்தை நோக்கி ஜனகர் எழுப்பியுள்ளார்.தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டின்படி உள்ளாட்சி அதி காரங்களில் அவர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும், அந்தப்பதவிகளை அவர்கள் வகிக்க முடியாத நிலை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

மதுரை மாவட்டம் மேலவளவு ஊராட்சி மன்றத்தலைவர் முருகேசன், துணைத்தலைவர் மூக்கன், ராஜா, செல் லத்துரை, சேவுகமூர்த்தி,பூபதி ஆகியோ ரின் குருதி குடித்து துவங்கிய சாதிவெறி இன்னும் தணிந்தபாடில்லை. சொல்லும் இடத்தில் கையெழுத்து போடுகடந்த 2011 ஆம் ஆண்டு லெ. கொட்டாணிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. இத் தேர்தலில் ஜனகரும், ஊராட்சிமன்ற எழுத் தர் க.முருகேஸ்வரி ஆதரவோடு சுப் பையா என்பவரும் போட்டியிட்டனர். கொட்டாணிபட்டி ஊராட்சி, இபி காலனி,குருசாமிபுரம் காலனி ஆகிய குக்கிராமங்களைக் கொண்டது. நடை பெற்ற ஊராட்சிமன்றத் தேர்தலில் ஜன கர் வெற்றி பெற்றார். ஜனகருக்கு, பர மேஸ்வரி என்ற மனைவியும், கண்ணன் என்ற மகனும், கலாவதி, பொன்லெட்சுமி என்ற மகள்களும் உள்ளனர். ஜனகர் 12 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வந்து அவர் பார்த்த போது கணக்கு பதிவேடுகள் அலு வலகத்தில் இல்லை. எழுத்தர் வீட்டில் இருந்துள்ளது. இது குறித்து கேள்வி எழுப் பிய ஜனகருக்கு கிடைத்தது வசவு தான். அன்று முதல் இன்று வரை மதுரை மாவட்ட ஆட்சியராய் இருந்தவர்களுக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இதுவரை ஐந்து மனுக்களை கொடுத்துள்ளார். 

ஆனால்,எந்த நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை. உங்கள் ஊராட்சியில் என்ன நடக் கிறது என ஜனகரிடம் கேட்டதற்கு, நான் ஊராட்சிமன்றத் தலைவராக பதவியேற்ற நான் முதல் ஊராட்சிமன்ற எழுத்தர் முரு கேஸ்வரி எனக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறார். கணக்குப்பதிவேடுகளை அவர் வீட்டிற்கு எடுத்துச்சென்று விடு கிறார். வார்டு உறுப்பினர்கள் 5 பேர் எனக்கு ஆதரவாக உள்ளனர். நான் கையெழுத்துப்போடச்சொல்லும் இடத் தில் நீ கையெழுத்துப் போட வேண்டும். இல்லாவிட்டால் உன் மீது முறைகேடாக புகார் கொடுத்து நம்பிக்கையில்லாத் தீர்மானம் போட்டு பதவியில் இருந்து இறக்கி விடுவேன் என்று மிரட்டினார். இந்நிலையில கடந்த 24.12.2011 அன்று அனைத்து கிராமங்களிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இத்தகவலை கேள்விப்பட்ட நான் தே.கல்லுப்பட்டி பஞ்சாயத்து அலுவலகம் சென்று வட்டார வளர்ச்சி அலுவலரிடம், கிராமசபைக் கூட் டம் நடத்துவதற்கான தகவல் கிடைக்க வில்லை என்று கூறியதற்கு, ஊராட்சி மன்ற எழுத்தரிடம் தகவல் தெரிவித்த தாகக் கூறினார். அவரிடம் எனக்கு ஏன் தகவல் சொல்லவில்லை என்று கேட்ட தற்கு, உனக்கு எதற்கு தெரியப்படுத்த வேண்டும் என்று கூறிவிட்டார். இந்த கிராமசபைக் கூட்டம் நடந்ததாகவும் இக் கூட்டத்தில் இந்திரா நினைவு குடி யிருப்புத் திட்டத்தின் கீழ் பிற்படுத்தப் பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 4 பேருக்கு வீடுகளும், தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வீடும் வழங்கத் தீர்மானம் போட்டதாகவும் அதில் என்னை கையெ ழுத்துப்போடச்சொன்னார்கள். நான் மறுப்பு தெரிவித்தேன்.

அதற்கு எழுத்தர் மிரட்டினர். இதுகுறித்து 4.1.2012 அன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத் தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. போலி ரசீது மூலம் வசூல்இதே போன்று எனது ஆலோசனை யின்றி கொட்டாணிப்பட்டி ஊராட்சியில் நடைபெற்று வரும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை செயல்படுத்த தனது சமுதாயத்தைச் சேர்ந்த இருவரை எழுத்தர் நியமனம் செய்தார். கடந்த மார்ச் மாதம் மாதாந்திரக் கூட்டம் 19.3.2012 அன்று நடைபெறும் என்ற பதிவுத் தபாலை எழுத்தருக்கு அனுப்பினேன். அவர் உள்ளிட்ட அவருடைய ஆதரவு உறுப்பினர்கள் கூட்டத்திற்கு வர வில்லை. 5.4.2012 அன்று மாதாந்திரக் கூட்ட தகவலை பதிவுத்தபால் மூலம் எழுத்தருக்கு அனுப்பி வைத்தேன். அதை யும் திருப்பி அனுப்பி விட்டார். தொடர்ந்து நான் திட்டமிடும் எந்தக் கூட்டத்திற்கும் எழுத்தர் மற்றும் அவரது ஆதரவு உறுப் பினர்கள் வருவதில்லை. இதனால் எந்த வொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட முடியவில்லை. எனது அனுமதியில் லாமலே வீட்டுவரி மற்றும் குடிநீர் வரி ரசீது புத்தகத்தில் எனது கையொப்பம் போல் ரப்பர் ஸ்டாம்ப் அடித்து வசூலித்து வருகின்றனர். இது குறித்தும் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றும் என்னை செயல்பட விடாமல் தடுக்கும் சாதி ஆதிக்கவாதிகளிடம் இருந்து தொடர்ந்து கொலைமிரட்டல் வந்த வண்ணம் உள்ளது.

இதுகுறித்து தே.கல்லுப்பட்டி காவல்நிலையத்தில் 19.7.2012 அன்று புகார் கொடுத்தேன். வழக்குப்பதிவு செய்யப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இந்தப் புகாரை வாபஸ் பெறக் கோரி கடந்த 25.9.2012 அன்று எனக்கு ஒரு தபால் அனுப்பப்பட்டுள்ளது. தே. கல்லுப்பட்டி அக்ரஹாரத்தெருவைச் சேர்ந்த கே.சுந்தரேசன் என்பவர் கையெ ழுத்தில் வந்த அந்த கடிதத்தில், காவல் துறை மேலதிகாரிகள் எங்களிடம் உள்ள தால் மனுவை வாபஸ் பெற்று விடு. இல்லையென்றால் சாதியை அழித்து கோவிலுக்குள் நுழையவிடமாட்டோம் என்று மிரட்டி கடிதம் எழுதியுள்ளனர். இப்படி தொடர்ந்து வரும் மிரட்டலாலும், வாக்களித்த மக்களுக்கு செயல்பட முடியாததாலும் எனது பதவியை ராஜி னாமா செய்வதைத் தவிர வேறுவழி யில்லை என்று கூறிய ஜனகர், இந்த மிரட்டல் கடிதம் தொடர்பாக 1.10.2012 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அன் சுல்மிஸ்ராவிடம் புகார் மனுவை அளித் துள்ளார். இந்த புகாருக்காவது நடவ டிக்கை எடுக்கப்படுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.- ப.கவிதா குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக